Published:Updated:

காடுகளின் குரலாகவும், வனவிலங்குகளின் பாதுகாவலராகவும் அறியப்படும் டாக்டர் கிருத்தி கரந்த், தற்போது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை தேடித் தந்துள்ளார். 'நேஷனல் ஜியோகிராஃபிக்' அமைப்பு வழங்கும் 2026-ஆம் ஆண்டிற்கான 'ஆண்டின் சிறந்த ஆய்வாளர்' விருதை வென்று அவர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
வனவிலங்கு பாதுகாப்புத் துறையில் உலக அளவில் மிக உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் இந்த விருதைப் பெறும் முதல் ஆசியப் பெண்மணி இவர்தான் என்பது இந்தியாவிற்குத் தனிச்சிறப்பு.



