
வெனிசுவேலாவின் மீது கடந்த ஆகஸ்டிலிருந்து அமெரிக்கா நடத்தி வந்த தாக்குதல்கள் வெள்ளிக்கிழமை(3ம் தேதி) நள்ளிரவுக்கு மேல் , சனிக்கிழமை அதிகாலை, அமெரிக்கப் படைகள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் மாளிகையிலேயே அதிரடியாகப் புகுந்து அவரையும், அவர் மனைவி சிலியா ஃப்லோரஸையும் கடத்திச் சென்ற காட்சிகளோடு கிளைமாக்ஸை எட்டியிருக்கின்றன.
தலைநகர் கேரகாஸில் உள்ள வெனிசுவேலா அதிபர் மாளிகையில் புகுந்த அமெரிக்க அதிரடிப் படைகள், உறக்கத்தில் இருந்த மதுரோவையும், அவர் மனைவியையும், இழுத்துச் சென்று அமெரிக்கப் போர்க்கப்பல் யு.எஸ்.எஸ் ஐவோ ஜிமாவில் ஏற்றி நியுயார்க் கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நியுயார்க் நீதிமன்றத்தில் ஏற்கனவே மதுரோ மீது போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்காவுக்கு கடத்தியதாக வழக்குகள் இருக்கின்றன. அந்த வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டும்.




